Tamil Nadu

ரம்ஜான் பண்டிகை: திருச்சி – சென்னை தாம்பரம் இடையே சிறப்பு ரயில்!

திருச்சி- சென்னை தாம்பரம் இடையே 3 நாட்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மார்ச் 29, 30, 31 ஆகிய நாட்களில் காலை 5.35 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் பகல் 12.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

மறு மார்க்கத்தில் மாலை 3.45 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு 10.40 மணிக்கு திருச்சி சென்றடைகிறது.

இதேபோல, மார்ச் 28ஆம் தேதி மாலை 6 மணிக்கு தாம்பரம் – கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது மறு மார்க்கத்தில் மார்ச் 31ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து சிறப்பு ரயில் புறப்படுகிறது.

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை காரணமாக, பயணிகளின் கூடுதல் கூட்ட நெரிசலை குறைக்க இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கான முன்பதிவு இன்று(ஞாயிற்றுக்கிழமை) முதல் தொடங்கியுள்ளது.

Author

JOE

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

TN Assembly 2024 | டங்ஸ்டன் சுரங்கம் விவகாரத்தில் திமுக U- டர்ன் அடித்ததா?
Tamil Nadu

TN Assembly 2024 | டங்ஸ்டன் சுரங்கம் விவகாரத்தில் திமுக U- டர்ன் அடித்ததா?

  • December 10, 2024
டங்ஸ்டன் சுரங்கம் விவகாரத்தில், நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி-க்கள் போதிய எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என பொதுமக்களே பேசதொடங்கியிருப்பது திமுகவுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. மறுபக்கம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி
EVKS Elangovan Political Journey: பெரியாரின் பேரன் முதல் மத்திய அமைச்சர் வரை.. ஈவிகேஎஸ் இளங்கோவனின் அரசியல் பயணம்..
Tamil Nadu

EVKS Elangovan Political Journey | பெரியாரின் பேரன் முதல் மத்திய அமைச்சர் வரை.. ஈவிகேஎஸ் இளங்கோவனின் அரசியல் பயணம்..

ஈவிகேஎஸ் இளங்கோவன் 1948 ஆம் ஆண்டு, டிசம்பர் 21 ஆம் தேதி ஈரோடு கோபிசெட்டிபாளைத்தில் பிறந்தார். இவர், தந்தை பெரியாரின் அண்ணன் கிருஷ்ணசாமியின் பேரன் ஆவர். தமிழகத்தின்